ஒரு வணிகனும், துறவியும் பசிக் களைப்புடன் அந்த சத்திரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அந்தச் சத்திரத்தில் ஒருவருக்குத்தான் உணவு மீதமிருந்தது.
வணிகன் சந்நியாசியைப் பார்த்து, “இன்று ஏகாதசியாயிற்றே... துறவியாகிய தாங்கள் பட்டினி இருக்க வேண்டாமா?” என்று கேட்டான்.
துறவியும் வேறு வழியின்றி, “ஆமாம்” என்று தலையை ஆட்டினார்.
வணிகன் அங்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் வாங்கிச் சாப்பிட்டான்.
பின்னர் அங்கிருந்து இருவரும் சேர்ந்து செல்லத் தொடங்கினர்.
இடையில் ஒரு நதி குறுக்கிட்டது.
வணிகன் துறவியிடம், தன்னைத் தூக்கிச் செல்லும்படி கட்டளையிட்டான்.
துறவியும் அவனைத் தூக்கிச் சென்றார்.J
நதியில் பாதி தூரம் சென்ற பின்பு, துறவி வணிகனைப் பார்த்து, “உன் மடியில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார்.
வணிகன், “என் மடியில் பணமிருக்கிறது!” என்றான்.
உடனே துறவி, “அப்படியா? துறவியான நான் பணத்தைச் சுமக்கக் கூடாதே” என்றபடி அவனைத் தண்ணீரில் அப்படியே போட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக