திங்கள், 24 பிப்ரவரி, 2014

கோபம் தவிருங்கள்




கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்...?


இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை 

* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள். 

* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.

* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.

* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.

* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.

* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.

* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.

* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.

* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.

* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம்.

* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....

- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.


அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.


ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) – புகாரி, 

கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.


எனவே கோபம் தவிர்ப்போம் 
நன்மையை வளர்ப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக