திங்கள், 16 டிசம்பர், 2013

உயர்ந்த மனிதர் உமர் (ரலி)




மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. 

வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.

நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். 

அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். 

அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில்...

கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ,

“அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர்.

“ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்;

கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார்.

 “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, 

“இல்லை. 

அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். 

“கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும்,

 “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். 

உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.


சிறிது நேரத்தில் உமர் ரலியல்லாஹு, அன்ஹு அவர்களும் அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு....
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது.

“ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலில் விழச் சென்றார். 

அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, 

“அவர் எனது மனைவி’ என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறவும்,

 ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! 

நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அதனால்தான், “உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்று ஆட்சி செய்ய வேண்டும்’ என்றார் அண்ணல் காந்தியடிகள்.


சனி, 2 நவம்பர், 2013

கொசுவை ஏன் குர்ஆனில் அல்லாஹ் கூறினான் ?



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!
விந்தையானது. 

           மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில்
வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு
மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி
சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை
நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து
தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத
அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது
என்ன வசனம் தெரியுமா
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற
வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு உடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-
வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட
இணைவைப்பாளர்கள் ஈயும்சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா?
என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக்
கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன்
மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது
சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக
இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான்எனக்கூறிவிட்டு
அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன்
மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய
படைப்பாகவோ இருக்கலாம்  அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,


வெள்ளி, 1 நவம்பர், 2013

யார் அதிபுத்திசாலி ?

ஆஹா...இதுவன்றோ மெய்யறிவு...!
***********************************


நபிமொழிக் கலையிலும் இஸ்லாமியச் சட்ட அறிவிலும் 
திருக்குர்ஆன் விரிவுரைக் கலையிலும் 
மாபெரும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) எனும் அறிஞர். 


இவர் மார்க்க அறிஞராக மட்டுமின்றி 
மாபெரும் வணிகராகவும் திகழ்ந்தார்.


ஒருநாள் அவர் தம் வணிகம் தொடர்பாக 
மற்றொரு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். 


வழியில் ஒரு காடு. அதைக் கடந்துகொண்டிருந்தபோது
அங்கே ஓர் இளைஞனைக் கண்டார். 


அறிவொளி வீசும் இளைஞரின் முகமும் கண்களும் 
அவரைப் பெரிதும் கவர்ந்தன. 


இவன் காட்டில் இருப்பதால் 
அறிஞர்களின் தொடர்பு கிடைக்க வழி யில்லையே. 
அதனால் இவனுடைய கல்வியறிவு 
பாதிக்கப்பட்டிருக்குமேஎன 
அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கருதினார். 


அவர் அந்த இளைஞரிடம் பேச விரும்பினார். 


தம்பி, நீ ஏதாவது கல்வியறிவு பெற்றிருக்கிறாயா? 
அல்லது வீணே காலத்தைக் கழிக்கின்றாயா?” 


தன்னிடம் வலிய வந்துபேசும் அவரை 
ஏறிட்டு நோக்கிய இளைஞன் பிறகு 
அமைதியாகச் சொன்னான்:


நான் அதிகம் படித்தவனல்லன். ஆயினும் 
நான்கு விஷயங்கள் பற்றிய அறிவைப் பெற்றுள்ளேன். 

சிரம், செவி, நாவு, உள்ளம்

ஆகிய நான்கைப் பற்றியும் நன்கு அறிந்துள்ளேன்


இளைஞனின் மறுமொழி 
அவரைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்கியது. 
அந்த நான்கு அறிவைப் பற்றிக் 
கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.


அல்லாஹ்வின் சந்நிதியில் 
தாழ்ந்து நின்று வணங்குவதற்காகத்தான் தலை. 
இறைவாக்குகளைக் கேட்பதற்காகத்தான் காதுகள். 
அவன் புகழைப் பாடவே நாவு. 
அவன் நினைவைப் பதித்துக்கொள்ளவே உள்ளம்.



அறிஞர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்கின் 
வியப்பு எல்லை கடந்தது. 


மாபெரும் இஸ்லாமிய அறிஞரான அவர் 
அந்த இளைஞனிடம் தம்பி, எனக்கு ஏதேனும் 
அறிவுரை கூறுவாயாகஎனத் 
தாழ்மையுடன் வேண்டிக் கொண்டார்.


பெரியவரே, தாங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. 
ஆயினும் தங்களின் தோற்றத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் 
தாங்கள் மிகச் சிறந்த அறிஞராக 
இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 

”தாங்கள் இறை உவப்புக்காகக் 
கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
இந்த உலகத்திலிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். 
மாறாக, வெறும் உலகியலுக்காகத் 
தாங்கள் கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
அல்லாஹ்விடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.



இதுதான் உண்மையான மெய்யறிவு என்று 
அறிஞர் உணர்ந்து கொண்டார்.