திங்கள், 16 ஜூன், 2014

முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!
அறிய தகவல்
அருமையான செய்திகள்

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள்உள்ளன.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில்உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில்காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறத ு.

* யானையின்துதிக்க ை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.
* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும் .

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில ் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும்அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.
* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றைய ும் விட மிகவும்வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும ் இந்த அமைப்பு கிடையாது.

* ஆஸ்திரேலியாவிற் கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும்அரசா ங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச ் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும்ஏற் று குடிமக்களை அனுப்பி வைக்கிறது
.
* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறா ர்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்துவருகின் றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிற து.

* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும ் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந ்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்.. ..

திங்கள், 31 மார்ச், 2014

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.

மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘
இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘
நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘
இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘
இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘
அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘
சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘
அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘
அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘
வேறே எப்படி வாங்கறது?’’

‘‘
அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘
என்ன சொல்றே நீ?’’

‘‘
பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’

‘‘
இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘
பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.


பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘
கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘
உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘
என்ன உத்தரவு?’’

‘‘
அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘
அப்புறம்?’’

‘‘
உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!



புதன், 26 மார்ச், 2014

நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும்...!


தவளையும் மனிதனும்...


சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும்தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்கவையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போதுதவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏறதவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்தவெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும்போது வெப்பத்தை தாங்கமுடியாமல்தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்கமுயற்சி செய்யும்.ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால்வெளியேற முடியாது. ஏன் என்றால்வெப்பத்துக்கு ஏற்ப தன்உடலை மாற்றி கொண்டே வந்ததால்அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்ததவளை இறந்துவிடும்.
எது அந்த தவளையை கொன்றது ?
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான்அந்ததவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால்,எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாகமுடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான்அதை கொன்றது.
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்பஅனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போகவேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும்என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள்நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல்போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாகசெய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும்போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.
நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும்முடியாது.


சரியான போட்டி

ஒரு டாக்டர், ஒரு எஞ்சினியர் ஒரு வக்கீல் மூணு

பேரும் ஒரு கம்பெனியோட தலைவர் பதவிக்குப்

போட்டியிட்டாங்க.

நேர்முகத் தேர்வுல பல கேள்விகள் கேட்கப்பட்டன...

கடைசிக் கேள்வி : ரெண்டும் ரெண்டும் எவ்வளவு?
தனித் தனியாகத் தான்....

டாக்டர் ரொம்ப யோசிச்சு நாலுன்னு சொன்னார்.

எஞ்சினியர் ஏதோ படமெல்லாம் போட்டுட்டு
கணக்குப் பண்ணி நாலுன்னு சொன்னார்.

கடைசியா வந்த வக்கீல் , எழுந்து ஜன்னல் கதவை

எல்லாம் அடைச்சார். வாசக் கதவத் தாப்பாள்

போட்டார். சீலிங், லைட்டு, டெலிபோன், ச்விட்சு

எல்லாத்தையும் செக்கப் பண்ணி காமிரா

ஒட்டுக்கேக்குற கருவி ஏதும் இல்லன்னு உறுதி

செஞ்ச பிறகு வந்து " எவ்வளவா இருக்கணும்னு

நீங்க நினைக்கிறீங்க?" அப்படீன்னார்.

பதில் யு ஆர் அப்பாயிடட்.


பிரயாண துஆ


வாகனத்தில் ஏறும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறவேண்டும்.


ஏறி உட்கார்ந்ததும் அல்லாஹு அக்பர் என்று 3 தடவைகள் கூறிவிட்டு பின்னர்; பின்வரும் துஆவை ஓத வேண்டும்.


سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ

சுப்(B)ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹுமுக்ரினீன். வஇன்னா இலா ரப்(B)பி(B)னா லமுன்கலிபூ(B)ன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(Fரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து அஹ்லீ அல்லாஹும்ம இன்னி அஊது பி(B)(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப(B)தில் மன்ளரி வஸூயில் முன்கலபி(B) பி(F)ல் மாலி வல் அஹ்லி

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய்.இறைவா!இப்பயணத்தின்சிரமத்திலிருந்தும்,மோசமானதோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம்

வேண்டாம் பொய்...!

என்றைக்கும் பொய் இப்படி தான் ஆக்கும் ....


வாத்தியார் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பியூன் வந்து 

தலைமை ஆசிரியர் அவரை  அழைப்பதாகக் கூறினார்.

தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க, அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். வந்ததும் கேட்பேன்'', என்று சொல்லி விட்டு அவர் வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.
''
உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,'' என்றார்.
உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள்.
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.

வியாழன், 13 மார்ச், 2014

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவாற்றல்

ஆச்சரியமான கேள்விகளும்...!
அருமையான பதில்களும்...!


ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா [ரலி] அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி] அவர்களுக்கு அனுப்பினார்கள்.
அருமை நாயகம் [ஸல்] அவர்களால் திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143] என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான பேரறிஞர் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்.

2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் ஈஸா நபி [அலை] அவர்களாகும்.

3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் [அலை] அவர்களாகும்.
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் [அலை] அவர்களாகும்.

5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் [அலை] அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் [அலை] அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த சாலிஹ் நபி [அலை] அவர்களின் அதி அற்புத ஒட்டகம்.

[3] மூஸா [அலை] அவர்களின் பாம்பு.


6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர். சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்.சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.
7.பின்னர், ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி] அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி இது தான் எல்லா பொருளின் மூல வித்துஎன பதிலளித்தார்கள்.