வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இதயம் மறந்த பத்து விஷயங்கள்

ஒரு நாள் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து

அல்லாஹ் குர்ஆனில் நீங்கள் என்னிடம் கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன்

என்று கூறுகின்றான் ஆனால் நான் அல்லாஹ்விடம் பல தடவை கேட்டு

விட்டேன் எனக்கு ஏதும் தரவில்லை என்று அவர் கூறினார்

இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி)  அவருக்கு பதிலளித்தார்கள்

நீங்கள் இறைவனிடம் கேட்கிறீர்கள் ஆனால் உங்களின்

இதயம்  10 விஷயத்தை மறந்து விட்டது

1.இறைவனின் கட்டளைகளை அறிந்தும் சிறம் சாய்ப்பது இல்லை

2.குர்ஆனை ஓதுகிறீர்கள் அதன் படி நடப்பது இல்லை

3.ஷைத்தான் பகைவன் என அறிந்தும் அவனை விடுவதில்லை

4.நபி (ஸல்)அவர்கள்  மீது அன்பு வைக்கிறீர்கள் ஆனால் அவர்களின் 
வழிமுறைகளை பின்பற்றுவதில்லை

5.சொர்கத்தை நேசிக்கிறீர்கள் ஆனால் அதற்கு தேவையான அமல்களை செய்வது இல்லை 

6.நரகை பயப்படுகிறீர்கள் ஆனால் பாவத்தை தவிர்ப்பது இல்லை

7.மரணம் நிச்சயம் என அறிந்தும் நல் அமல் செய்வது இல்லை

8.அடுத்தவனின் குறைகளை ஆராய்கிறீர்கள் தங்களின் குறைகளை மறந்து விடுகிறீர்கள்

9.இறைவனின் உணவை உண்கிறீர்கள் ஆனால் அவனுக்கு நன்றி
 தெரிவிப்பது இல்லை

10.மரணமானவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் படிப்பினை பெறுவதில்லை

இவைகளை சரிபடுத்தி இறைவனிடம் கேட்டால் கண்டிப்பாக அல்லாஹ் தருவான் என   இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரலி) கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக