ஒரு இரவில் எப்படி சாத்தியம்...?
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
தனது மருமகன்
ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்
அலியே ஐந்து
விசயத்தை தினமும் செய்யாமல் உறங்க வேண்டாம்..
1} முழு குர்ஆனை
ஓதாமல் உறங்காதே
2} தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்க வேண்டாம்
3} கஃபதுல்லாஹ்வை
தவாபு செய்யாமல் உறங்காதே
4} சுவர்க்கத்தில்
உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே
5} உனது எதிரியை (
இச்சை ) கொல்லாமல் உறங்காதே..
அதற்கு ஹழ்ரத்
அலி ரழியல்லாஹு அன்ஹு .
நாயகமே அனைத்தும்
ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க...
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ..
1} குல்ஹூவல்லாஹூ
சூராவை 3 முறை ஓதினால்
குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை கிடைக்கும்
2} சூரத்துல்
பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்
3} நான்காம் கலிமாவை
10 முறை ஓதினால் கஃபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்
4} லாஹவ்ல வலா
குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை
பாதுகாத்த நன்மையை பெறுவீர்
5} அஸ்தக்கபிருல்லாஹில்
அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால்
உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள்....
இன்ஷா அல்லாஹ்
நாமும் ஓதி நன்மை பெறுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக