புதன், 26 மார்ச், 2014

பிரயாண துஆ


வாகனத்தில் ஏறும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறவேண்டும்.


ஏறி உட்கார்ந்ததும் அல்லாஹு அக்பர் என்று 3 தடவைகள் கூறிவிட்டு பின்னர்; பின்வரும் துஆவை ஓத வேண்டும்.


سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ

சுப்(B)ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹுமுக்ரினீன். வஇன்னா இலா ரப்(B)பி(B)னா லமுன்கலிபூ(B)ன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(Fரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து அஹ்லீ அல்லாஹும்ம இன்னி அஊது பி(B)(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப(B)தில் மன்ளரி வஸூயில் முன்கலபி(B) பி(F)ல் மாலி வல் அஹ்லி

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய்.இறைவா!இப்பயணத்தின்சிரமத்திலிருந்தும்,மோசமானதோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக