புதன், 26 மார்ச், 2014

வேண்டாம் பொய்...!

என்றைக்கும் பொய் இப்படி தான் ஆக்கும் ....


வாத்தியார் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பியூன் வந்து 

தலைமை ஆசிரியர் அவரை  அழைப்பதாகக் கூறினார்.

தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க, அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். வந்ததும் கேட்பேன்'', என்று சொல்லி விட்டு அவர் வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.
''
உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,'' என்றார்.
உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள்.
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக