புதன், 21 ஜனவரி, 2026

மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை

 ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒரு நாள் கேட்கப்பட்டது:* 


மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை நீங்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை? 


அதற்கு ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:


1.நான் பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தேன்;


2.நான் இறக்கும்போது தனியாகத்தான் இறக்க வேண்டும்; 


3.கப்ரில் வைக்கப் படும்போது தனியாகத்தான் வைக்கப் படுவேன்; 


4.அல்லாஹ்வின் முன்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது தனியாகத் தான் கேட்கப் படுவேன்; 


5.நான் நரகத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும்; 


6.சொர்க்கத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும். 


இப்படி இருக்க மக்களோடு எனக்கு என்ன இருக்கிறது?


ஹழ்ரத் ஹஸன் பஸரி (ரஹ்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக