ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒரு நாள் கேட்கப்பட்டது:*
மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை நீங்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை?
அதற்கு ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:
1.நான் பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தேன்;
2.நான் இறக்கும்போது தனியாகத்தான் இறக்க வேண்டும்;
3.கப்ரில் வைக்கப் படும்போது தனியாகத்தான் வைக்கப் படுவேன்;
4.அல்லாஹ்வின் முன்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது தனியாகத் தான் கேட்கப் படுவேன்;
5.நான் நரகத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும்;
6.சொர்க்கத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும்.
இப்படி இருக்க மக்களோடு எனக்கு என்ன இருக்கிறது?
ஹழ்ரத் ஹஸன் பஸரி (ரஹ்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக