செவ்வாய், 20 ஜனவரி, 2026

நம்பிக்கை அவன் மீதே

 முழு நம்பிக்கை வைப்போம்


எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது !! நாமெல்லாம் அவனின் சாதாரண படைப்புகள் தான் !!


இமாம் இப்னு சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு மஸ்ஜிதில் நுழைகிறார் .


அங்கு ஒரு பத்து வயது கூட நிரம்பி இருக்காத ஒரு சிறுவன் தொழுது கொண்டிருந்தான் எப்படிஎன்றால் மிகவும் பேணுதலுடன் , அல்லாஹ்வின்


அச்சம் மேலோங்கியவனாக பணிவோடு தொழுகையை நிறைவேற்றுவதை கண்ட இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவனை அழைத்து “ ஒ சிறுவனே நீ


யாருடைய மகன் ?” என்று கேட்க “நான் ஒரு அநாதை சிறுவன் எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை” என்று அந்த சிறுவன் கூறினான் .


இமாம் அவர்களோ ஆர்வமுடன் “நான் உன்னை தத்தெடுத்து கொள்ளவா ?


உனக்கு ஒரு தந்தையாக இருந்து உன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவேன் என்னோடு வர சம்மதமா ? என்றார்கள் .


அந்த பத்து வயது கூட நிரம்பாத அச்சிறுவனோ “நான் உங்களோடு வர ஐந்து நிபந்தனைகள் உள்ளது அதற்க்கு சரி என்றால் நான் உங்களோடு வருகிறேன் “ என்று கூறினான் .


இமாம் ஆச்சரியமுடன் “ என்ன அந்த ஐந்து நிபந்தனைகள் என்று கேட்க

அச்சிறுவன் பட்டியலிடுகிறான் “முதல் நிபந்தனை –எனக்கு பசிக்கும்போது

உணவளிப்பீர்களா ? “என்று கேட்க இமாம் “உனக்கு போதும் என்று சொல்லுமளவிற்கு உணவளிப்பேன் என்றார் .


மேலும் சிறுவனின் இரண்டாம் நிபந்தனை “எனக்கு தாகம் எடுத்தால் தாகம் தனிப்பீர்களா ?


இமாம் “ உனக்கு போதும் என்று சொல்லும் அளவிற்கு உன் தாகத்தை தணிப்பேன் “என்றார்கள்


மேலும் சிறுவனின் மூன்றாவது நிபந்தனை எனக்கு ஆடையில்லை என்றால் ஆடை அணிவிபீர்களா ? “


இமாம் : உனக்கு அழகிய ஆடைகளை அணிவிப்பேன் “ என்றார்கள்


சிறுவனின் நான்காவது நிபந்தனை எனக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம் அளிப்பீர்களா ?


இமாம் : நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பேன் . நிவாரணம் அளிப்பது அல்லாஹ் ஒருவனே “


சிறுவனின் ஐந்தாவது நிபந்தனை “ நான் இறந்தால் நீங்கள் எனக்கு உயிர் கொடுப்பீர்களா ?


இமாம் : பிறப்பும் இறப்பும் அல்லாஹ்வின் கரத்தில் அல்லவா உள்ளது “ என்றார்கள்


இமாமை மிக ஆழ்ந்து யோசிக்கவைத்தான் சிறுவன்


மேலும் அவன் இமாமை பார்த்து “ ஓ மனிதரே !! நீங்கள்


எனக்கு நோய்வாய் பட்டால் அதற்க்கு நிவாரணம் அளிக்க முடியாது !


நான் இறந்தால் என்னை திரும்பவும் உயிர்பிக்க முடியாது ! எனவே என்னை


விட்டுவிடுங்கள் .!!என்றதும் இமாம் “உன்னை விட்டுவிட்டால் உன்னை கவனிப்பவர் யார் ?


சிறுவனோ “ என்னை விட்டுவிடுங்கள் எவன் என்னை படைத்தானோ ,


எவன் எனக்கு நேர்வழி கொடுத்தானோ , எவன் எனக்கு உண்ணவும் , தாகம் தணிக்கவும் வைக்கிறானோ , யார் நான் நோய்வாய் பட்டால் நிவாரணம் அளிக்கிறானோ , யார் நான் இறந்தால் உயிர் கொடுபானோ அவனே


எனக்கு வாழ்வளிப்பான் ! அவனே என்னை கவனித்துகொள்வான் !!!


இதைகேட்ட இமாம் 

لا اله الا الله توكت علي الله كفى بالله وسبحانه


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை , அவனையே முழுமையாக நம்பிக்கை வையுங்கள் அவன் ஒருவனே நமக்கு போதுமானவன் ,மேலும் பரிசுத்தமானவன் .”என்றார்கள் .


இந்த சிறுவனின் நம்பிக்கையை போல் நாம் அனைவரும் அல்லாஹ்வின் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைப்போம் !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக